Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபையினால் ஒழுங்கு செய்யப்பட்ட சிறந்த ஏற்றுமதியாளர் ஜனாதிபதி விருதுகள் வழங்கும் நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் திறமையை வௌிப்படுத்திய ஏற்றுமதியாளர்களுக்கு இந்த நிகழ்வில் விருதுகள் வழங்கப்படும். உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் ஹெக்டர் எஸ் யாப்பா தலைமையில் அமைந்த குழு சிறந்த ஏற்றுமதியாளர்களை தெரிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

By

Related Post