Breaking
Fri. Dec 5th, 2025

‘சிறுவர்கள் தொடர்பில் செய்தி வெளியிடும்போது ஊடகங்கள் தம்மை பற்றி மட்டுமே சிந்தித்து செயற்படுவதுடன் அது தொடர்புடைய சிறுவர்களது எதிர்காலம் குறித்துச் சிந்திப்பதில்லை’ என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சகல ஊடகங்களும் சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்களாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என ஜனாதிபதி கூறினார்.

பொலனறுவை ரோயல் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று இடம்பெற்ற தேசிய சிறுவர் சபை தேர்தல் மற்றும் தலைமைத்துவ பயிற்சி வேலைத்திட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையில் ஜனாதிபதி இதனைக் கூறினார்.

By

Related Post