தலைவர் ரிஷாட்டின் நிதியுதவியில் கும்பலங்கை ஹமீதியா பாடசாலைக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் (முன்னை அரசாங்கத்தின்) பன்முகப்படுத்தப்பட்ட நிதியொதுக்கீட்டில், கட்சியின் அரசியல் அதிகாரபீட உறுப்பினரும் குருநாகல் மாவட்ட அமைப்பாளருமான முஸம்மிலின் வழிக்காட்டலின் கீழ், அல்ஹாஜ் மொய்னுதீனின் வேண்டுகோளின் பேரில், இப்/கும்பலங்கை ஹமீதியா முஸ்லிம் மஹா வித்தியாலயத்துக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கட்சியின் உயர்பீட உறுப்பினரும் முன்னாள் மாநகரசபை உறுப்பினருமான அஷார்தீன் மொய்னுதீனினால், போட்டோகொப்பி இயந்திரம், பிரின்டர் இயந்திரம் மற்றும் Amp, Mic உள்ளிட்ட குறித்த இலத்திரனியல் உபகரணங்கள், பாடசாலை பிரதி அதிபர் மஹேஷியிடம் கையளிக்கப்பட்டது.