Breaking
Fri. Dec 5th, 2025

(K.Kapila)

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திலுள்ள தொழிற்சாலை ஒன்றின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிரியாவிற்கு சொந்தமான குளிர்சாதன பெட்டிகளை தயாரிக்கும் தொழிற்சாலையை சேர்ந்த 450 ஊழியர்களே இவ்வாறு தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

குறித்த தொழிற்சாலையின் ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனையடுத்து அதிகாரிகள் தொழிற்சாலையை மூடிவிட்டு தப்பி சென்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Post