Breaking
Fri. Dec 5th, 2025

நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்டு சற்று முன்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டர் கணக்கில் கருத்துப் பதிவேற்றம் செய்துள்ளார்.

இதில், “எனக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றி, நான் என்றும் எப்போதும் உங்களுடன் இருப்பேன், அரசாங்கத்தின் நீதி அமைப்பில் என்னை கேலி செய்வது போல் தோன்றினாலும், நான் குற்றமற்றவன் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவரும்” என பதிவேற்றியுள்ளார்.

இதேவேளை நாமலின் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம் (17) தங்காலையில் ஆர்ப்பாட்டம் இடம் பெற்றமையும், கூட்டு எதிர்க்கட்சியினர் பாரிய பங்கு வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.

By

Related Post