Breaking
Sat. Dec 13th, 2025

பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் மற்றும் நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எல்.அப்துல் லதீப் ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று, இன்று (09) நிந்தவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது, அனர்த்த நிவாரணம், அஸ்வெசும கொடுப்பணவு, பள்ளி நிர்வாக சர்ச்சை மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி விவகாரம் உள்ளிட்ட இன்னோரான்ன விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.

குறிப்பாக, எந்தவொரு அரசியல் தலையீடுகளுமின்றி நிந்தவூர் பெரிய பள்ளிவாயல் மற்றும் காஷிபுல் உலூம் அரபுக் கல்லூரி நிர்வாகத் தெரிவுகளை நடாத்துமாறு, பிரதேச செயலாளர் மற்றும் கலாச்சார உத்தியோகத்தரிடம் அஷ்ரப் தாஹிர் எம்.பி கேட்டுக்கொண்டார்.

Related Post