பள்ளி சென்ற மாணவர்கள் பொலிஸ் நிலையத்தில்!

காலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் மூவர் கஞ்சா பயன்படுத்திய நிலையில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த மாணவர்கள் பாடசாலை சீருடையுடன் பாடசாலைக்கு வெளியே கஞ்சா பயன்படுத்திய நிலையில் இருந்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த மாணவர்கள் மூவரும் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்து இந்த பாடசாலைக்கு வந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவர்களை இன்று காலி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.