Breaking
Fri. Dec 5th, 2025
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா நன்றி தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சேவையாற்றுவதற்கு நாடாளுமன்ற உறுப்புரிமை வழங்கியமைக்காக பிரதமர் உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழுவிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்து கொண்டு தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றிற்கு சென்று, மக்களுக்கு சேவையாற்ற முடிந்தமை மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் பதவியின் ஊடாக மக்களுக்கு சிறந்த முறையில் சேவையாற்ற திட்டமிட்டுள்ளதாக சரத் பொன்சேகா கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

By

Related Post