பொது வேற்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் மகள் பத்திரிக்கா சிறிசேன நேற்று பொலநருவையில் மகளிர் அமைப்புடன் தனது தந்தைக்காக முதலாவது அரசியல் பிரச்சாரம்

அஷ்ரப் ஏ சமத்

எனது வாழ்க்கையில் எனத அம்மாவோ நானோ எனது தந்தையின் அமைச்சுகளுக்கோ கால் வைத்ததே கிடையாது. ஏனைய அமைச்சர்களது பிள்ளைகளைப்போன்று நாங்கள் தந்தையின் பவரைப் பாவித்தது கிடையாது. எனது அம்மாவுக்கு தனது தந்தையின் அமைச்சு மற்றும் வேறு வரப்பிரசாரங்களோ தெரியாது. ஆனால் எனது தந்தை ஒரு கரைபடியாத கைகள். அவர் ஒருபோதும் எங்களை அரச சொத்துக்களை சுரண்டியோ அல்லது சொத்துக்களை சேர்த்தவர் அல்ல. எனது வாழ்நாளின் இன்று தான் எனது தந்தை எடுத்துக்கொண்ட சவாலுக்கு மகளாகிய நான் என்னால் செய்யவேண்டிய கடமைக்காக தங்கள் முன் உறையாற்றுகின்றேன்.