Breaking
Fri. Dec 5th, 2025
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் சிவில் சமூக அமைப்பின் தலைவர் மாதுலுவாவே சோபித்தவும் குருநாகலில் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடவுள்ளனர்.
எதிர்வரும் 8ம் திகதியன்று இவர்கள் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் இணைந்து சிறந்த வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும் என்று அடிப்படையில் வாக்காளர்களுக்கு தெளிவுப்படுத்தவுள்ளனர்.
அத்துடன் பல கூட்டங்களையும் அவர்கள் குருநாகலில் நடத்தவுள்ளனர்.
எனினும் இருவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் பிரச்சார மேடையில் ஏறுவதில்லை என்று முடிவெடுத்துள்ளனர்.
இந்தநிலையில் சந்திரிக்கா மற்றும் சோபித தேரரின் நடவடிக்கைகளுக்கு மஹிந்த ராஜபக்ச தரப்பு தமது கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

Related Post