முன்னாள் மேலதிக நீதவானுக்கான பிணை இடைநிறுத்தம்

கொழும்பு மேலதிக நீதமன்றத்தின் முன்னாள் மேலதிக நீதவான்  திலின கமகேவுக்கு, கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தினால்  வழங்கப்பட்டுள்ள பிணையை, கொழும்பு மேல் நீதிமன்றம் இடைநிறுத்தி உத்தரவிட்டுள்ளது.

அவருக்கு வழக்கப்பட்ட விளக்கமறியலை இல்லாதொழிக்க கூடாது என்று சட்டமா அதிபர், திருத்திய விண்ணப்பமொன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த விண்ணப்பத்தை பரிசீலனைக்கு உட்படுத்திய போதே, மேல் நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.