Breaking
Sat. Dec 13th, 2025

மிக நீண்ட வரலாற்றைக்கொண்ட குருநாகல், வாரியப்பொல நகர பள்ளிவாசல் நிர்மாணிப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, வெள்ளிக்கிழமை (03) பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.

சுபஹ் தொழுகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் குருநாகல் மாநகர சபை முன்னாள் உறுப்பினர் அஷார்தீன் மொய்னுதீன் விஷேட அதிதியாகப் பங்கேற்றிருந்ததுடன், ACJU உப தலைவர் உமர்தீன் மௌலவி, ஹிதாயத்துல்லாஹ் மௌலவி உட்பட உலமாக்கள், வாரியப்பொல ஜமாஅத்தினர், தனவந்தர்கள், ஊர்ப் பிரமுகர்கள் எனப் பலரும் சமூகமளித்திருந்தனர்.

பல வருடங்களாக, இப் பள்ளிவாசலை நிர்மாணிப்பதற்கு அனுமதி கிடைக்காமல், இழுபறியில் இருந்த நிலையில், பள்ளி நிர்வாக சபையினால் அஷார்தீனின் கவனத்துக்கு கொண்டுசென்றதையடுத்து, அவரின் முயற்சியினாலும் அல்லாஹ்வின் பேருதவியினாலும் சுமார் 10 வருடங்களுக்கு மேலாக தீர்க்கப்படாமலிருந்த அனுமதி விவகாரம் தீர்க்கப்பட்டு, உரிய முறையில் அனுமதி பெறப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்!

Related Post