வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை… அமைச்சர் ரிஷாட் உறுதியளிப்பு!

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீண்டும் திறப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் இன்று மாலை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன், உயர்மட்டக் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இன்று (29/11/ 2017) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வாழைச்சேனை கடதாசி ஆலையை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.யோகேஸ்வரன் விடுத்த வேண்டுகோளை அடுத்தே அமைச்சர் ரிஷாத் இவ்வாறு தெரிவித்தார்.