Breaking
Sat. Dec 6th, 2025

பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் தான் கூறியதாக முன்னாள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

கடந்த பாராளுமன்றத்தில் இறுதிக் காலத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தானே இருந்து வந்ததாகவும், எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றி பெற்றால் தானே பிரதமராகும் நிலை காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கட்சியை ஒருங்கிணைப்பதற்காகவும், வெற்றிபெற வைப்பதற்காகவும் பிரதமர் பதவியை தியாகம் செய்வதாக முன்னாள் ஜனாதிபதியிடம் தெரிவித்தேன் என்று அவர் கூறியுள்ளார்.

மஹியங்களையில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே சிறிபால டி சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Related Post