Breaking
Sat. Dec 6th, 2025

தமது ஆட்சிகாலத்தில் 13 வருட கல்வியை அவசியப்படுத்தவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அந்த காலத்துக்குள் பாடசாலைகளுக்கு செல்ல சிரமங்கள் இருக்குமாக இருந்தால் அதற்காக நிவாரணங்கள் வழங்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஆசிரியர்களை பொறுத்தவரையில் அவர்கள் கல்வி கற்பித்தல் மற்றும் தேர்தல் நடவடிக்கைகளை தவிர வேறு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படக் கூடாது.

அவர்கள் மாணவர்களுக்கு முழு கல்வியையும் போதிக்கும் செயலை மாத்திரம் மேற்கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Related Post