Breaking
Fri. Dec 5th, 2025
இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையிலேயே மனிதர்கள்- மனிதர்களுக்கு இடையில் உறவை தக்கவைத்து கொள்வதற்காக முயற்சிப்பதாக தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கையின் சிறந்த துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார, கிரிக்கெட் மைதானத்தில் இல்லாமையானது எங்கள் எல்லோருக்கும் நட்டமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் ஹைய்தராபாத்தில் இணைந்து நேற்று செவ்வாய்க்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துதெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
‘சில காலத்துக்கு முன்னர் டெஸ் போட்டிகளை நிறைவடைந்ததன் பின்னர் தான் நாங்கள், இதயங்களால் ஒன்றிணைந்தோம். அதேபோல, எங்கள் அனைவருக்கும் சிரேஷ்ட விளையாட்டு வீரர் சங்கக்கார இல்லாமையானது நட்டமாகும்’ என்றார்.

Related Post