Breaking
Fri. Dec 5th, 2025

மரண தண்டனையை அமுல்படுத்துவதில் அர்த்தமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

சமூகத்தில் குற்றச் செயல்களை தடுப்பதற்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதில் பயனில்லை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மக்களின் எண்ணங்களை சரியான வழிக்கு கொண்டு வர வேண்டியது மிகவும் அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

சமூக விழுமியங்களை மேம்படுத்தி, நற் பண்புகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியதே முதன்மையானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் துஸ்பிரயோகம்,போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட பாரிய குற்றச்செயல்களை தடுக்க மரண தண்டனையை மீளவும் அமுல்படுத்துவது குறித்து தற்போதைய அரசாங்கம் கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post