Breaking
Fri. Dec 5th, 2025
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா இராஜதந்திர வெளிநாட்டு கடவுச்சீட்டில் கடந்த செவ்வாய்கிழமை சிங்கப்பூர் செல்ல முயற்சித்த போதிலும், அந்த கடவுச்சீட்டில் செல்வதற்கு அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை என குடிவரவு மற்றும் குடியகல்வு தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

ஈகே 348 விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்கு அவர் கடந்த செவ்வாய்கிழமை விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

எனினும் அவரை செல்ல அனுமதிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் அவர் நேற்று சாதாரண வெளிநாட்டு கடவுச்சீட்டில் சிங்கப்பூர் சென்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

By

Related Post