Breaking
Fri. Dec 5th, 2025

இலங்கையில் பதிவான மிகப் பெரிய இலஞ்ச தொகையாக கருதப்படும்  12.5 கோடி ரூபாவை இலஞ்சமாக பெற்ற சுங்க அதிகாரிகள் விவகாரத்துடன் தொடர்புபட்ட மேலும் இரு சுங்கத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழு இவர்களை இன்று (25) கைது செய்தது. சுங்க அத்தியட்சர்களான வசந்த விமலவீர மற்றும் உபாலி செனரத் விக்ரமசிங்க ஆகியோரே இவ்வாறு கைதுச் செய்யப்பட்டதக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும் இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக் குழுவின் சிறப்பு விசாரணைப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

By

Related Post