களனி கங்கையில் நீராடச்சென்ற சிறுவன் காணவில்லை

தொம்பே, கப்புகொடை அருகில் களனி கங்கையில் நீராடிக் கொண்டிருந்த 10 வயது பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.

குறித்த சம்பவத்தில் காணாமல் போன சிறுவனை பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.