நாமலின் விதி சில தினங்களில் தெரியும் – ரவி கருணாநாயக்க

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் விதியினை நாளை அல்லது மறுநாள் வரும் போது பார்க்க முடியும் என ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தற்போது இடம்பெற்று வருகின்ற விசாரணைகளின்படி நாமல் ராஜபக்ஷ பணம் மறைக்கப்பட்ட இடம் மற்றும் அவருடை அரண்மனை பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளதாகவும் கடந்த ஆட்சியின் போது ஊழல், மோசடியில் ஈடுபட்ட அனைவரையும் மக்கள் முன்னிலையில் முழங்கால் இடச்செய்யவுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.