155 சட்டவிரோத ஆயுதங்கள் அரசிடம் ஒப்படைப்பு

சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் வேலைத்­திட்­டத்தின் கீழ் இதுவரை 155 ஆயு­தங்கள் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிக்கும் நட­வ­டிக்கை கடந்த மாதம் 25 ஆம் திகதி ஆரம்­ப­மாகி எதிர்­வரும் மே 6 ஆம் திகதி முடி­வ­டை­கி­றது.

இக்­கா­லத்­தினுள் கைய­ளிக்­கப்­படும் ஆயுதம் தொடர்பில் எவ்­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் ஆயு­தங்­களை கைய­ளிப்­ப­வர்­க­ளுக்கு அவற்றின் வகை­க­ளுக்கு ஏற்ப பணத்தொகை வழக்­கப்­ப­டு­வ­தாகவும் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

மேலும், எதிர்வரும் மே 6 ஆம் திக­தியின் பின்னர் நாட­ளா­விய ரீதியில் சட்டவிரோத ஆயுதங்களை தேடி விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.