உயிருடன் பிடிக்கப்பட்ட மரை

பொகவந்தலாவ மேல்பிரிவு தோட்டப் பகுதியில் உயிருடன் மரை ஒன்றை  தோட்ட பொது மக்களும் பொலிஸாரும் இணைந்து பிடித்துள்ளனர்.

 உணவு தேடிவந்த குறித்த மரையின் கால் ஒன்று உபாதைக்குள்ளாகியிருந்த நிலையிலேயே பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த மரை தற்போது நல்லதன்னி வனலிலங்கு நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.