Breaking
Fri. Dec 5th, 2025

தமது கட்சிக்குள் பிளவு என்ற செய்தியை ஜே.வி.பி மறுத்துள்ளது. கட்சிக்குள் எவ்வித பிளவுகளும் இல்லை என்று கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அண்மைக்காலமாக இதுகுறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வரும் நிலையில் இந்த கருத்தினை திஸாநாயக்க வெளியிட்டுள்ளார்.

இந்தநிலையில் கட்சியின் தலைமை பதவியில் மாற்றம் கொண்டு வரப்படவேண்டும் என்று கட்சியின் முன்னிலை தலைவர்களான டில்வின் சில்வா மற்றும் லால் காந்த கோரி வருவதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இதனை அனுரகுமார திஸாநாயக்க நிராகரித்துள்ளார்.

By

Related Post