Breaking
Fri. Dec 5th, 2025
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அமெரிக்காவிற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்று -01- பொலிஸ் மா அதிபர் அமெரிக்காவிற்கான பயணத்தை ஆரம்பித்திருந்தார்.
உலகப் பொலிஸ் மா அதிபர்களுக்கான மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் இவ்வாறு அமெரிக்காவிற்கு விஜயம் செய்கின்றார்.
பூஜித் ஜயசுந்தர மீளவும் நாடு திரும்பும் வரையில் பதில் பொலிஸ் மா அதிபராக எஸ்.எம். விக்ரமசிங்க கடமையாற்றுவார்.
பொலிஸ் மா அதிபர்களின் மாநாடு அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 10ம் திகதி பொலிஸ் மா அதிபர் ஜயசுந்தர நாடு திரும்புவார் என தெரிவிக்கப்படுகிறது.

By

Related Post