Breaking
Fri. Dec 5th, 2025

அண்மையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸினால் கொண்டுவர பட்ட கைத் தொழில் பேட்டை சம்மாந்துரையில் அமைப்பதுக்கான முயட்சியை சம்மாந்துறை பாராளுமன்ற உறுப்பினர் தடுத்து நிறுத்தியது உண்மையிலேயே மிக கண்டிக்கத்தக்க விடயம் மட்டும் அல்ல எதிர் காலத்தில் முஸ்லீம் சமுதாயமே ஒரு பொருளாதார பின்னடைவை அடையும் என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இஸ்தாபகர் மொஹிடீன் பாவா கூறினார் .

அரசியலில் பகைமை இருக்கலாம் ஆனால் சமுதாயத்துக்கு ஒரு அபிவிருத்தி வரும் போது அதை எல்லோரும் அரசியலுக்கு அப்பால் இருந்து ஆதரவு கொடுத்து பெற்றுக் கொள்வதே நமக்கு நன்மை பயக்கும் .

எதிர் காலத்திலாவது வரும் அபிவிருத்தி திட்டம்களை மக்கள் ஆதரவு கொடுத்து அபிவிருத்திகளை தடை விதிக்கும் அரசியல் வாதிகளை புறம் தள்ளி அதன் பயன்களை பெற்றுக் கொள்வது சாலச் சிறந்தது எனக் கூறினார்

By

Related Post