Breaking
Fri. Dec 5th, 2025

இந்திய அரசானது தங்களது நாட்டின் இரும்புச் சீமாட்டியை இழந்திருப்பதானது விசேடமாக தமிழ் நாட்டிற்க்கு பாரிய இழப்பாக அமைந்திருப்பது மட்டுமல்லாமல் இவ் இழப்பானது எல்லோருக்கும் மிகுந்த சோகத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“அம்மா”என இந்தியநாட்டு மக்களால் அழைக்கப்பட்ட அவரின் அரசியல் பங்களிப்பானது அந் நாட்டிற்க்கு மிக முக்கியமானதாக காணப்பட்டது.இந்திய அரசு பலமிக்க அரசியல் தலைவியை இழந்து நிற்க்கும் இத்துயர தருனத்தில் அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியும் இந் நாட்டு மக்களும் அவர்களின் துயரத்தில் பங்கு கொள்கின்றனர். என ஜெயலலிதாவின் மரணத்திற்கான தனது இரங்கல் செய்தியில் கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சரும்,அகில இலங்கை மக்கள் காங்ரஸ் கட்சியின் தவிசாளருமாகிய எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

By

Related Post