Breaking
Tue. May 14th, 2024

மன்னார், பி.பி பொற்கேணி – அளக்கட்டு அஸ் / ஸபா பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று வெள்ளிக்கிழமை (19) மாலை பாலர் பாடசாலை முன்றலில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அலிகான் சரீப், முசலி பிரதேச சபை செயலாளர் நஜீம், மன்னார் வலய பாலர் பாடசாலைகளுக்கான பிரதிப்பணிப்பாளர் அஸ்லம், முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், வைத்தியர் றிஸ்வான், சாஹீர், றிபாய், றமழான் மௌலவி, சிறாஜீடீன், சுகைப், கஸ்ஸாலி, இஸ்றத், முசலி பிரதேச பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா மற்றும் பள்ளிவாசல் பரிபாலனசபைத் தலைவர் டில்சாத் உட்பட பள்ளி நிர்வாகிகளும் கட்சியின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

Related Post