Breaking
Tue. May 21st, 2024

மன்னார், முசலி, வேப்பங்குளம் லிட்டில் ரோஸ் பாலர் பாடசாலையின் விடுகைவிழா இன்று திங்கட் கிழமை (05) பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.

முசலி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் எஸ்.எம்.எம்.பைறுஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் முசலி கோட்ட உதவிக்கல்விப் பணிப்பாளர் உவைஸ், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் முஜாஹிர், மன்னார் மாவட்ட மரண விசாரனை அதிகாரி நசீர், பாலர் பாடசாலைகளுக்கான இணைப்பாளர் அமீருன் நிஸா மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள், பள்ளி பரிபாலன சபைத் தலைவர்கள்,  நிர்வாகிகள் உட்பட ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

Related Post