Breaking
Fri. Dec 5th, 2025

பிரதம அதிதியாக தாஹிர் எம்.பி பங்கேற்பு!

நிந்தவூர் பாத்திமா முன்பள்ளி பாடசாலை நிர்வாகக் குழுவின் தலைவரும் கிராம சேவை உத்தியோகத்தருமான A.R.முஹம்மட் வஸீம் தலைமையில், சனிக்கிழமை (28) நிந்தவூர், வெளவாலோடை மைதானத்தில் இடம்பெற்ற முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு விழா நிகழ்வில், பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், விசேட அதிதியாக கல்முனை வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் U.L.M.சாஜித், கௌரவ அதிதிகளாக பதில் நீதிபதி A.M.நஸீல், சட்டத்தரணி A.L.றியாஸ் ஆதம், அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் M.I.M.A.ஹுசைன், ஓய்வுநிலை அதிபர் A.L.நிசாமுதீன், Dress line நிறுவன உரிமையாளர் S.அப்துல்லா மற்றும் ரிமோ ஐஸ்கிரீம் நிறுவன உரிமையாளர் L.M.கிஸ்றத் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

Related Post