Breaking
Fri. Dec 5th, 2025

உள்ளூராட்சி மன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது குறித்தும் விரிவாக ஆராய்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அனுராதபுர மாவட்ட முக்கியஸ்தர்களுடனான சந்திப்பொன்று, கட்சியின் உயர்பீட உறுப்பினரும் அனுராதபுர மாவட்டத் தலைவருமான A.R.M.தாரிக் ஹாஜியாரின் தலைமையில் இடம்பெற்றது.

ஞாயிற்றுக்கிழமை (05), அவரது இல்லத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில், கட்சியின் முக்கியஸ்தர்கள், உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், அனுராதபுரம் மாவட்டத்தில் எவ்வாறு கட்சியின் செயற்பாடுகளை அமைத்துக்கொள்வது மற்றும் எதிர்காலத்தில் கட்சியின் முன்னெடுப்புக்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பவை தொடர்பில் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

Related Post