Breaking
Fri. Dec 5th, 2025

பான் கீ மூனை ஐ.நா பொதுச்செயலராக்குவதற்கு தாம் கணிசமான பங்காற்றியதாக, தமது நண்பர்களிடம் கியாங்னம் என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் தலைவரான, சங் வொன்-  ஜொங் தெரிவித்த தகவலை கொரிய நாளிதழான Dong-A Ilbo வெளியிட்டிருக்கிறது.

தாம் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருந்ததாகவும், அதனைப் பயன்படுத்தி, சிறிலங்கா சார்பில் 2006ம் ஆண்டு ஐ.நா பொதுச்செயலர் பதவிக்குப் போட்டியிட்ட ஜயந்த தனபாலவை போட்டியில் இருந்து விலக வைத்ததுடன், பான் கீ மூனை ஆதரிக்கச் செய்ததாகவும், தென்கொரிய தொழிலதிபர் தெரிவித்துள்ளார்.

தேர்தலின் ஆரம்பக்கட்டத்தில் தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் சுராகியாட் சதிராதை மற்றும் ஐ.நாவின் உதவிச்செயலராக இருந்த இந்தியாவின் சசி தாரூர் ஆகியோருக்குச் சாதகமாக இருந்தது.

ஐ.நா பாதுகாப்புச் சபையில் மூன்று கட்ட வாக்களிப்புகள் நடத்தப்பட்ட போதும் வெற்றியாளரைத் தெரிவு செய்ய முடியவில்லை.

இந்தநிலையில், 2006 செப்ரெம்பர் இறுதியில், ஜயந்த தனபால போட்டியில் இருந்து விலகி, பான் கீ மூனுக்கு ஆதரவளித்ததையடுத்து, அவர் ஐ.நா பொதுச்செயலராகத் தெரிவு செய்யப்பட்டார்.

Related Post