Breaking
Fri. Dec 5th, 2025

மக்களின் பணத்தை சுவரொட்டிகளுக்காகவும், பதாதைகளுக்குமாக வீணடிக்க வேண்டாம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கடந்த கால மகிந்த ராஜபக்சவின் ஆட்சியின் போது, சுவரொட்டிகளையும், பதாதைகளையும் அமைப்பதற்காக பல பில்லியன் ரூபாய்கள் செலவிடப்பட்டுள்ளன.
இதற்காக அரச நிறுவனங்களினால் பொது மக்களின் நிதி ஒதுக்கப்பட்டது.
இனிவரும் காலங்களில் இதனைத் தவிர்த்து, அந்த நிதி மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

Related Post