Breaking
Fri. Dec 5th, 2025
கொழும்பில் நிர்மாணிக்கப்படவிருக்கும் போர்ட் சிட்டிக்கு எதிராக இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டமானது இன்று (4) மாலை நான்கு மணியளவில் குறித்த திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ள இடத்தில் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்த திட்டத்தினை எதிர்க்கும் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

இந்த போர்ட் சிட்டி திட்டத்தினை உடனே இடைநிறுத்துமாறு கோரியே குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெறவுள்ளதாகவும், இந்த ஆர்ப்பாட்டத்தில் 9 அமைப்புக்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் இதன் ஏற்பாட்டாளர் சுஜீவ சாம்கர தெரிவித்துள்ளார்.

By

Related Post