Breaking
Tue. Jun 18th, 2024

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் கொழும்பு மாவட்ட குழுத் தலைவராக சுசில் பிரேமஜயந்த நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் பொதுச் செயலாளரும் ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளருமான சுசில் பிரேமஜயந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனுவில் கைச்சாத்திடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

மகாவலி கேந்திரத்தில் இந்நிகழ்வு இடம்பெறுகிறது.

இதுவரை விமல் வீரவன்ச, வாசுதேவ நாணயக்கார, பந்துல குணவர்தன, டலஸ் அழகப்பெரும ஆகியோர் வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளதாக தெரிய வருகிறது.mn

Related Post