Breaking
Fri. Dec 5th, 2025

தெமடகொடை – காலிபுல்லை தோட்டப்பகுதியில் உள்ளுரில் தயாரிக்கப்பட்ட இரண்டு வெடிகுண்டுகள்  வைத்திருந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (10) மாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பிலே குறித்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தெமடகொடை மற்றும் மாலிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 32 மற்றும் 21 வயதுடையவர்களாவர்.

சந்தேக நபர்கள் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post