Breaking
Fri. Dec 5th, 2025

கட்சிகளை உடைப்பது மஹிந்த ராஜபக்சக்களுக்கு பொழுது போக்காக மாற்றமடைந்துள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார்.

முன்னாள் பிரதமர் எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் நினைவு நிகழ்வுகள் வெயாங்கொடவில் நேற்று (26) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றியபோது சந்திரிக்கா இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பிளவடையச் செய்வது சிலரின் பொழுது போக்காக அமைந்துள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமது ஆட்சிக் காலத்தில் நாட்டின் கல்வித்துறைக்காக பாரியளவில் சேவையாற்றியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

By

Related Post