க.பொ.த உயர்தரப் பரீட்சை ஓகஸ்ட் 4 இல் ஆரம்பம்

க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது என பரீட்சை ஆணையாளர் நாயகம் டப்ளியு. எம்.என்.ஜே. புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டுக்கான பரீட்சைகளே ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி ஆரம்பமாகி ஓகஸ்ட் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.